தேவகோட்டை, ஜூன் 26: தேவகோட்டை தியாகிகள் சாலையில் தேசிய வங்கி ஏடிஎம்மில் கடந்த 22ம் தேதி கோடிக்கோட்டை சின்னத்தம்பி(52)பணம் எடுக்க சென்றார். கார்டை ஏடிஎம்மில் நின்று கொண்டிருந்த நபரிடம் கொடுத்து பணம் எடுக்க கொடுத்துள்ளார். அந்த ஆசாமி ரூ.50ஆயிரத்தை அபேஸ் செய்து விட்டு அவரது ஏடிஎம் கார்டை கொடுத்து விட்டு தலைமறைவானார். இதுகுறித்து சின்னத்தம்பி கொடுத்த புகாரின்பேரில் தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிந்து மோசடி ஆசாமியை தேடி வருகின்றனர்.