மதுரை, ஜன.29: மதுரை கால்நடை துறை சார்பில் சிறுவாலை மருந்தகத்திற்கு உட்பட்ட அம்பலத்தாடியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கால்நடை உதவி இயக்குநர் டாக்டர் பழனிவேல் தலைமை வகித்தார். முகாமில் உதவி மருத்துவர்கள் முனியாண்டி, ஆறுமுகம், சிந்து ஆகியோர் மருத்துவ சிகிச்சை பணிகளை மேற்கொண்டனர்.
கால்நடை ஆய்வாளர் முருகையன், உதவியாளர்கள் வாசு, ஜெயாதேவி ஆகியோர் கால்நடைகளுக்கு கருவூட்டல் உள்ளிட்ட சிகிச்சை உதவி பணிகளை மேற்கொண்டனர். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள், வீட்டு செல்லப்பிராணிகள் ஆகியவை பயனடைந்தன. மேலும் முகாமில் சிறந்த விவசாயிகள் மற்றும் கால்நடைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதேபோல் கால்நடை சுகாதார முகாம் கட்டபுளி நகரில் நடந்தது. கால்நடை துறை உதவி இயக்குநர் டாக்டர் பழனிவேல் தலைமையில் நடந்த முகாமில், உதவி மருத்துவர்கள் சிந்து மற்றும் முனியாண்டி ஆகியோர் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளித்தனர். கால்நடை ஆய்வாளர்கள் முருகையன், சுகப்பிரியா மற்றும் உதவியாளர்கள் வாசு, ஜெயாதேவி ஆகியோர் சிகிச்சை உதவி பணிகளை மேற்கொண்டனர்.