வேளச்சேரி: செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் செங்கமலம் (84). இவர் நேற்று முன்தினம் ராஜிவ்காந்தி சாலையை கடக்கும் முயன்றபோது கேளம்பாக்கம் நோக்கி அசுர வேகத்தில் சென்ற கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த செம்மஞ்சேரி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு, குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்து, குரோம்பேட்டை சக்தி நகர் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் பிரகாஷை கைது செய்தனர்….