Thursday, May 16, 2024
Home » கார் கதவு திறந்து கீழே விழுந்து பயங்கரம் ஐடி பெண் ஊழியர் தலை நொறுங்கி பரிதாப சாவு: விபரீதத்தில் முடிந்த சண்டே சுற்றுலா, கவலைக்கிடமான நிலையில் 3 பேர்

கார் கதவு திறந்து கீழே விழுந்து பயங்கரம் ஐடி பெண் ஊழியர் தலை நொறுங்கி பரிதாப சாவு: விபரீதத்தில் முடிந்த சண்டே சுற்றுலா, கவலைக்கிடமான நிலையில் 3 பேர்

by kannappan

சென்னை: நண்பர்களுடன் காரில் சென்ற ஐடி பெண் ஊழியர் ஒருவர் பரிதாபமாக பலியானார். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை  சேர்ந்தவர் கிருத்திகா (23). இவர், சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள விடுதியில் தங்கி, ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதேநிறுவனத்தில், அபிஷா (26), கொளத்தூர் பகுதியை சேர்ந்த  ஸ்ரீதர் (29), பங்கஜ் (18) ஆகியோர் வேலை செய்கின்றனர். இவர்கள் நேற்று காலை சென்னையை சுற்றி பார்க்க காரில் சென்றனர். காரை ஸ்ரீதர் ஓட்டி சென்றார். இவர்களின் கார் துரைப்பாக்கத்தில் இருந்து ரேடியல் சாலை வழியே பல்லாவரம் நோக்கி சென்றது. பள்ளிக்கரணை குப்பை கிடங்கு அருகே சென்றபோது,  கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கு சிறுபால தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், காரின் கதவு தன்னிச்சையாக திறந்தது. இதனால், காரின் கதவு அருகே இருந்த கிருத்திகா, அது திறந்ததால், பாலம் மற்றும் சாலையில் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் தலை நொறுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மற்ற 3 பேரும் காரின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இவர்களை இந்நிலையில் அக்கம்பக்கத்தினர்  மயங்கி கிடந்த  3 பேரையும்  மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், கிருத்திகாவின் சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது….

You may also like

Leave a Comment

five × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi