காரைக்குடி, ஜூன் 17: காரைக்குடி செக்காலை சாலையில் பெட்டிக்கடை வைத்துள்ளவர் அபிராஜ். இவர் தனது வீட்டில் பெங்களூரில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வாங்கி வந்து காரைக்குடி கணேசபுரம் வைத்தியலிங்கபுரத்தில் உள்ள தனது வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்து தனது கடையில் வைத்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாக காரைக்குடி ஏஎஸ்பி ஸ்டாலினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து புகையிலை பொருட்களை மொத்தமாக எடுத்து வந்து இறக்கும் போது சுற்றி வளைத்த தனிப்படை போலீசார் சோதனை செய்தனர். அதில் 86 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அபிராஜ் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.