தேவகோட்டை, ஜூன் 17: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா செங்கமடையைச் சேர்ந்தவர் அழகர்சாமி(50. இவர் தனது டூவீலரில் தேவகோட்டையை நோக்கி வந்து கொண்டிருந்தார். இவர் செலுகை கோட்டூரணி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த போது எதிரே தேவகோட்டை தாலுகா செலுகையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (45) என்பவர் டூவீலரில் வந்துகொண்டிருந்தார்.
இருவரது டூவீலரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அழகர்சாமி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பாலகிருஷ்ணனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த பாலகிருஷ்ணண் திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் இந்த விபத்து குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.