திருத்துறைப்பூண்டி, ஜன.2: காரைக்குடியில் இருந்து சென்னைக்கு தினசரி ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நெடும்பலம் வர்த்தக சங்கம் வலியுறுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் வர்த்தக சங்கத்தின் 2024ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் தலைவராக சுப்பையன், செயலாளராக மோகன், பொருளாளராக தாவுது உசேன், துணைத் தலைவராக கணேசன், துணை செயலாளராக சுவாமி வெற்றிவேல், கவுரவ ஆலோசகர்களாக செல்வராஜ் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர்கள் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். சங்கத்தின் கவுரவ ஆலோசகர் டாக்டர் சகாயம் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கூட்டத்தில் காரைக்குடியில் இருந்து சென்னைக்கு தினசரி ரயில் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வர்த்தக சங்கம் சார்பில் மனு கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.