Saturday, May 18, 2024
Home » காதல் திருமணம் செய்தவர் தற்கொலை

காதல் திருமணம் செய்தவர் தற்கொலை

by Mahaprabhu

ஈரோடு, ஏப். 6: ஈரோடு, ஈ.பி.பி. நகர், சக்தி மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் இளங்கோ (26). இவரது மனைவி அபிசா (22). இருவரும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இளங்கோ கடந்த 3ம் தேதி தனது மனைவியின் தோடு ஒன்றை வாங்கிச் சென்று அடமானம் வைத்துள்ளார். மீண்டும் நேற்று முன்தினம் மனைவியிடம் மற்றொரு தோட்டையும் தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அவர் மறுக்கவே, இளங்கோ வீட்டுக்குள் சென்று தாழிட்டுக் கொண்டுள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் கதவை திறக்காததால் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சேலையால் தூக்கிட்ட நிலையில் இளங்கோ தொங்கியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு, அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் இளங்கோ இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இது குறித்து, ஈரோடு வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

1 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi