Tuesday, May 21, 2024
Home » காட்டு பன்றியை வேட்டையாட முயன்ற 5 பேர் கைது-துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

காட்டு பன்றியை வேட்டையாட முயன்ற 5 பேர் கைது-துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

by kannappan

ஆனைமலை : பொள்ளாச்சி சேத்துமடை அருகே காட்டு பன்றியை வேட்டையாட முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட சேத்துமடை அருகே உள்ள மாங்கரை வனப்பகுதியில் துப்பாக்கி சத்தம் கேட்டதாக, அருகில் உள்ள விவசாய தோட்டத்தில் பணியாற்றி வந்த கணேசன் என்பவர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, அங்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள், காண்டூர் கால்வாய் வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், காரில் துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், காரில் இருந்தவர்கள் கோவையைச் சேர்ந்த மோகனசுந்தரம் (44), பாலசுப்பிரமணியம் (41), சதீஷ் (41), கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (49) மற்றும் பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் வனப்பகுதிக்குள் சென்று காட்டு பன்றியை வேட்டையாட முயன்றதும், அதற்காக இரண்டு தோட்டாக்களை பயன்படுத்தியதையும் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, அவர்களிடமிருந்து  துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து 5 பேரையும் கைது செய்தனர்….

You may also like

Leave a Comment

10 + nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi