Sunday, May 12, 2024
Home » கழுகுமலையில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலி

கழுகுமலையில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலி

by Neethimaan

கழுகுமலை, ஏப்.16:கழுகுமலையில் வீட்டில் மின் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து டிரைவர் இறந்தார். கழுகுமலை அண்ணா புது தெருவைச் சேர்ந்தவர் சிங்கராஜ்(57). இவர் அங்குள்ள தனியார் எண்ணெய் மில்லில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் வீட்டில் குடிநீருக்காக மின்மோட்டாரை இயக்குவதற்காக சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

தகவல் அறிந்து கழுகுமலை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார், சிங்கராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

9 + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi