கருங்கல், மார்ச் 26 : கருங்கல் – நாகர்கோவில் சாலையில் கருங்கல் கனரா வங்கி எதிர்புறம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியில் 10 நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து நீர் வெளியேறி வீணாகிறது. இந்த குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு சாலையில் செல்லும் வாகனங்கள் பெரும் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதை தொடர்ந்து அப்பகுதியினர் விபத்தை தடுக்கும் வண்ணம் அந்த இடத்தை சுற்றி சிவப்பு பட்டையை கட்டியுள்ளனர். குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்த பின்பும் அதிகாரிகள் சரி செய்யாமல் பணியில் அலட்சியமாக உள்ளனர். எனவே குடிநீர் குழாயை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
கருங்கல் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
previous post