தர்மபுரி, டிச.24: தர்மபுரி அருகே கருங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். தர்மபுரி அடுத்த ராஜாப்பேட்டை பகுதியில் விழுப்புரம் மண்டலம் சுரங்கத்துறை மற்றும் மண்டல பறக்கும்படை உதவி இயக்குனர் ராமஜெயம் தலைமையிலான குழுவினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரி டிரைவர், அதிகாரிகளை பார்த்ததும் வண்டியை அங்கேயே நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தார். அதிகாரிகள் லாரியில் சோதனை செய்தபோது, மண்ணுடன் கருங்கற்களை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கருங்கற்கள் கடத்தி வந்த அந்த லாரியை பறிமுதல் செய்து, போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து தப்பிய டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
previous post