Sunday, May 12, 2024
Home » கரடிவாவியில் மரக்கன்று நடும் விழா

கரடிவாவியில் மரக்கன்று நடும் விழா

by Ranjith

 

பல்லடம், அக்.2: பல்லடம் அருகேயுள்ள கரடிவாவி அண்ணன்மார் கோவில் அருகில் உள்ள விஷ்னு வனத்தில் காரணம்பேட்டை ராக் சிட்டி ரோட்டரி சங்கம், எஸ்.எல்,என்.எம். மேல்நிலை பள்ளி தேசிய நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சார்பில் காந்தி ஜெயந்தி விழாவையொட்டி மரக்கன்று நடும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு காரணம்பேட்டை ராக் சிட்டி ரோட்டரி சங்கத்தின் பட்டயத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

செயலாளர் கார்த்திகேயன்,பொருளாளர் நவீன்,சுற்றுச்சூழல் பொறுப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் மரக்கன்றுகள் நடும் பணியை கரடிவாவி எஸ்.எல்,என்.எம். மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் அம்சவேணி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் என்.எஸ்.எஸ். திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் முருகேசன், சங்கோதிபாளையம் மகிழ்வனம் தாவரவியல் பூங்கா செயலாளர் சோமு.என்ற பாலசுப்பிரமணியம், பொருளாளர் பூபதி, தாவரவியல் வல்லுனர் உதயகுமார், தாய் மண் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

14 − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi