கம்பம், நவ. 7: தேனி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த தோட்ட தொழிலாளியான ஈஸ்வரன்(55). இவர் கடந்த 28ம் தேதி இரவு வனத்துறையினரை அரிவாளால் தாக்க முயன்றதாக கூறி வனத்துறையினர் ஈஸ்வரனை துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார். இதில் வனத்துறையினரை கண்டித்தும், ஈஸ்வரன் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கம்பம் ஒன்றியம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். இதற்கு ஒன்றிய செயலாளர் மதனகோபால் தலைமை தாங்கினார்.நகர செயலாளர் கல்யாண சுந்தரம், மாவட்ட செயலாளர் பெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தங்கம், தமிழ்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளானமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.