Tuesday, May 21, 2024
Home » கபாலீஸ்வரர் கோயிலில் சினிமா பாடலுக்கு நடனம்: போலீசில் அறநிலையத்துறை புகார்

கபாலீஸ்வரர் கோயிலில் சினிமா பாடலுக்கு நடனம்: போலீசில் அறநிலையத்துறை புகார்

by Ranjith

 

சென்னை, பிப்.5: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வளாகத்திற்குள் சினிமா பாடலுக்கு நடனம் ஆடி இரண்டு பேர் வீடியோ வெளியிட்டது சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக அறநிலையத்துறை போலீசில் புகாரளித்துள்ளது.மயிலாப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோயிலில் இருவர் சினிமா பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. கோயில் வளாகத்திற்குள் இளைஞர்கள் சினிமா பாடலுக்கு நடனம் ஆடி அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டது கடும் விமர்சனத்திற்குள்ளானது.

கபாலீஸ்வரர் கோயில் வளாகத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அதை மீறி, பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ எடுத்ததற்கு பக்தர்கள் பலரும் கண்டனம் தெரிவித்ததோடு இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவந்தனர். மேலும் கோயில் நிர்வாகம் தரப்பில் இந்த வீடியோ உண்மையானதா அல்லது போலியானதா என தெரியவில்லை ஆனால், வீடியோவை பார்த்து பொதுமக்கள் சிலர் திருக்கோயில் நிர்வாகத்திற்கு எதிராக தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

எனவே, மேற்படி நபர்களால் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட வீடியோவை அவர்களது சமூக வலைதளத்தையும் முடக்கம் செய்து, இந்த வீடியோவில் நடனமாடி பதிவிட்ட நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்திட சென்னை, சேத்துப்பட்டு, கிழக்கு மண்டலம், சைபர் கிரைம் காவல் பிரிவு ஆய்வாளரிடம் கோயில் நிர்வாகத்தின் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

11 − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi