ஏற்காடு, மே 5:தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை சீசனின்போது ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், ரோஜா பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில், பல்வேறு விதமான ரோஜாக்கள் பAர் செடிகள் நடவு செய்யப்பட்டு, பூங்கா முழுவதிலும் காட்சிப்படுத்தப்படும். இதற்காக 35 ஆயிரம் தொட்டிகளில் பல வகையான மலர் செடிகள் நடவு செய்யப்படும். இந்த மலர் அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம்.
ஆண்டுதோறும், பூங்காவில் உள்ள மாடங்களில் கொய்மலரான லில்லியம் மலர் செடிகள் வைக்கப்படுகிறது. இந்த முறை லில்லியம் மலர் செடிகள் ஆயிரம் தொட்டிகளில் பூங்கா நர்சரியில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது லில்லியம் செடிகளில் இளஞ்சிவப்பு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகிறது. ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த லில்லியம் மலர் செடிகளை பார்த்து ரசித்து செல்கின்றனர்.