வருசநாடு, மார்ச் 31: கடமலைக்குண்டு கிராமத்தில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆண்டிபட்டி போலீஸ் டி.எஸ்.பி சண்முகசுந்தரம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு விழிப்புணர்வு அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
கடமலைக்குண்டு தனியார் மருத்துவமனையில் இருந்து கரட்டுப்பட்டி வைகை ஆற்று பாலம் வரை தேனி பிரதான சாலையில் வழியாக அணிவகுப்பு நடைபெற்றது. துணை ராணுவ படையினர் துப்பாக்கி ஏந்தியபடி அணிவகுத்து சென்றனர். இதேபோல் மயிலாடும்பாறை வருசநாடு கிராம முக்கிய வீதிகளிலும் துணை ராணுவ படையினரின் பாதுகாப்பு விழிப்புணர்வு அணிவகுப்பு நடைபெற்றது.