Thursday, May 16, 2024
Home » கஞ்சா போதையில் பெண்களை கேலி செய்ததால் ரவுடியை கொன்றோம்: கைதானவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம்; 6 பேர் சிறையில் அடைப்பு

கஞ்சா போதையில் பெண்களை கேலி செய்ததால் ரவுடியை கொன்றோம்: கைதானவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம்; 6 பேர் சிறையில் அடைப்பு

by kannappan

தண்டையார்பேட்டை: கஞ்சா போதையில் பெண்களை கேலி செய்தது, தாக்கியதால் ரவுடி சீனிவாசனை ஓடஓட விரட்டி கொலை செய்தோம் என்று கைதானவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். தண்டையார்பேட்டை, திலகர் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சீனா (எ) சீனிவாசன்(17). இவர் நேற்று முன்தினம் பகல் 2 மணியளவில் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே ஷேர் ஆட்டோ ஒன்றில் வந்து கொண்டு இருந்தார். அப்போது, இரண்டு மோட்டார் சைக்கிளில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட  மர்ம நபர்கள் ஷேர் ஆட்டோவை வழிமறித்து, அதிலிருந்து சீனிவாசனை இறக்கி அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றுள்ளனர். புதுவண்ணாரப்பேட்டை மாதா கோவில்  தெருவில் மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்த சீனிவாசன் தப்பி ஓடி உள்ளான். அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி  கத்தியால் தலையில்  வெட்டி விட்டு அங்கிருந்து  தப்பித்து ஓடி சென்றுவிட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும்  விரைந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நேற்று காலை இறந்து போனவரின் உடலை உறவினர்கள் வைத்தியநாதன் மேம்பாலம் அருகே ஒப்படைக்க வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து திருவெற்றியூர் உதவி கமிஷனர் முகமது நாசர் தண்டையார்பேட்டை ஆய்வாளர் சங்கரநாராயணன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதாக கூறினர். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த கலைந்து சென்றனர். அதனை தொடர்ந்து, பிரேத பரிசோதனை செய்து, சீனிவாசன் உடலை ஒப்படைத்தனர். அவர்கள் இறுதி சடங்கு செய்து காசிமேடு மையானத்தில் அடக்கம் செய்தனர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க தண்டையார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இது தொடர்பாக கொலையாளிகளை தனிப்படையினர் தேடி வந்த நிலையில். புதுவண்ணாரப்பேட்டை துணை ஆணையர் அலுவலகத்தில் நேற்று சரணடைந்தனர் வரதன் (35) சந்துரு (எ) சந்திரசேகர் (27) பாபா (எ) பார்த்திபன் (30) வசந்த் (21) பார்த்திபன் (24) உள்ளிட்ட 6 பேர் சரணடைந்தனர். இவர்களிடம் நடத்திய  விசாரணையில் சிசிக்சை பெற்று வரும்  பசுபதியின் மாமா கூறுகையில்,  இந்த பகுதியில் இறந்துபோன சீனிவாசன் மற்றம் அவர்களது நண்பர்கள்  கஞ்சா மற்றும் மது போதையில் பெண்களை கேலி செய்து வந்துள்ளனர். இதை தட்டி கேட்ட எனது தங்கையை கடந்த 12ம் தேதி  தலையில் வெட்டி உள்ளனர். இதனை தொடர்ந்து தங்கை மகனையும் அரிவாளால் அந்த கும்பல் வெட்டியது. இதற்கு பழி தீர்க்கவே சீனிவாசனை வெட்டி கொன்றோம் என்று வாக்கு மூலம் அளித்ததாக போலீசார் கூறினர். இந்த கொலைக்கு தொடர்புடைய  6 பேரையும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்….

You may also like

Leave a Comment

fourteen − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi