காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி வேலூர் செல்லும் சாலையில் உள்ள சாலை தெருவில் பாஜ மேற்கு மண்டலம் சார்பில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், மண்டல தலைவர் காஞ்சி ஜீவானந்தம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பாஜ மாவட்ட தலைவர் பாபு கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இதில், குளிர்பானங்கள், தர்பூசணி பழம், மோர் ஆகியவை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.