Friday, May 17, 2024
Home » ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தயத்தில் தாட்கோ திட்டங்கள் விழிப்புணர்வு விளக்க கூட்டம்: அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடந்தது

ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தயத்தில் தாட்கோ திட்டங்கள் விழிப்புணர்வு விளக்க கூட்டம்: அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடந்தது

by Ranjith

 

ஒட்டன்சத்திரம், ஜன. 20: ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயத்தில் தாட்கோ திட்டங்களை பற்றிய விழிப்புணர்வு மற்றும் விளக்க கூட்டம் காணொலி காட்சி மூலம் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தாட்கோ மூலம் கடன் உதவி பெறுவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வங்கி கடன் பெறுவது, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் துவங்குவதற்கு விண்ணப்பிக்கும் முறைகள், சிறுபான்மை பொருளாதர மேம்பாட்டு கழகத்தின் மூலம் கடன் உதவி பெறுவது, அரசு மானியத்தின் மூலம் கடன் உதவி பெறுவது குறித்து ஆலோசனை கூறப்பட்டது.

இதில் தாட்கோ உதவி மேலாளர் சுகன்யா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கமலக்கண்ணன், மாவட்ட தொழில் வங்கி உதவி இயக்குனர் அருணாச்சலம், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நலத்துறை அலுவலர் முருகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், வேதா தாஹிரா, பொறியாளர்கள் விஜயராகவன், தாமோதரன், வட்டாட்சியர் முத்துச்சாமி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கண்காணிப்பாளர் ராஜா, நபார்டு வங்கி பொன்னுவேல், மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, நகர செயலாளர் வெள்ளைச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன்,

தர்மராஜ், தங்கராஜ், சுப்பிரமணி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பொன்ராஜ், நகர்மன்ற தலைவர் திருமலைசாமி, ஒன்றிய தலைவர்கள் சத்தியபுவனா, அய்யம்மாள், துணை தலைவர்கள் தங்கம், காயத்ரி தேவி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மலர்விழி செல்வி, ஒன்றிய துணை செயலாளர்கள் முருகானந்தம், சிவக்குமார், ராஜ்குமார், சிவபாக்கியம் ராமசாமி, ஒன்றிய அவை தலைவர் செல்வராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்தராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தண்டபாணி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், வங்கி அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

three × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi