ஒட்டன்சத்திரம், ஜன. 19: ஒட்டன்சத்திரத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர சக்கரபாணி ஆலோசனையின் பேரில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி தலைமை வகித்தார். கூட்டத்தில் வருகின்ற ஜன.21ம் தேதி சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பொன்ராஜ், ஒன்றிய துணை தலைவர் தங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், ஒன்றிய துணை செயலாளர்கள் முருகானந்தம், ராமகிருஷ்ணன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தினேஷ் முத்துகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ரவிசங்கர், ஆனந்தராஜ், ரவிக்குமார், இப்ரின் ஆசித் மற்றும் திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் அணி, மாணவர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.