புழல்: புழல் அடுத்த லட்சுமிபுரம் ரெட்டேரி, செங்குன்றம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நீர்நிலையை ஆக்கிரமித்து ரெட்டேரி கரையோரம் 15க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் கட்டப்பட்டு இருந்தன. இவற்றை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பொதுப்பணித்துறை பொறியாளர் பொதுப்பணித்திலகம், செயற்பொறியாளர் சதீஷ் ஆகியோர் மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. புழல் உதவி கமிஷனர் ஆதிமூலம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்….