ஏரல், டிச. 28: ஏரல் பெரிய மணரா தெரு மற்றும் அம்மாள் தோப்பு பகுதியில் நெல்லை பொன்ராதா மருத்துவமனை மற்றும் சிவத்தையாபுரம் உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை சார்பில் சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடந்தது. ஏரல் பேரூராட்சி தலைவர் சர்மிளா தேவி மணிவண்ணன் தலைமை வகித்தார். ஏரல் பேரூர் திமுக செயலாளர் ராயப்பன், அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை பொன்ராதா மருத்துவனை டாக்டர் பொன்ராஜ் தலைமையில் சென்னை வேல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவக்குழுவினர் பொதுமக்களுக்கு பரிசோதனை நடத்தி சிகிச்சை அளித்து ஆலோசனை வழங்கினர். உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை துணை தலைவர் புளியநகர் அறவாழி கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டார். இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
ஏரல், அம்மாள்தோப்பில் இலவச மருத்துவ முகாம்
previous post