சேலம், மார்ச் 27: சேலம் சீரகாப்பாடியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். மல்லூர் போலீஸ் ஸ்டேசனில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் புகுந்த நபர்கள், 12 பவுன் நகையை திருடி சென்று விட்டனர். இது தொடர்பாக ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், திருட்டு வழக்கு ஒன்றில் காவேரிபட்டணத்தை சேர்ந்த ராஜ்குமார்(30) ஆட்டையாம்பட்டி பக்கமுள்ள எஸ்.பாலத்தை சேர்ந்த விஜய்குமார்(34) ஆகியோரை நாமக்கல் போலீசார் கைது செய்து விசாத்தனர். அப்போது ஏட்டு ஜெய்சங்கர் வீட்டில் நகை திருயதாக கூறினர். பின்னர் இருவரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் சேலம் சிறையில் இருந்த இருவரையும் ஆட்டையாம்பட்டி போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏட்டு வீட்டில் திருடிய 2 பேரை காவலில் எடுத்து விசாரணை
previous post