சேலம், மார்ச் 27: சேலம் அம்மாபேட்டை கந்தப்பன் தெருவைச் சேர்ந்தவர் தேவா (26). இவரது டூவீலரை அண்ணன் மணிமாறன் கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறி வாங்கி சென்றார். அப்போது அங்கு கடைக்கு வந்த அவரது நண்பர் வெங்கடேசன் என்பவர், மணிமாறனிடம் இருந்து டூவீலரை வாங்கி சென்றுள்ளார். இந்தநிலையில், வெங்கடேசனை சந்தித்த அவரது நண்பரான கூட்டாத்துப்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் டூவீலரை வாங்கி சென்றார். அதன் பின்னர், அந்த சிறுவன் மீண்டும் திரும்பவில்லை. அவரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் முடியவில்லை. பின்னர், விசாரித்த போது அந்த டூவீலரை சிறுவன் அடகு வைத்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி மணிமாறன் டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதையடுத்து அடகு வைத்த வண்டியை மீட்டு சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
டூவீலரை அடமானம் வைத்த சிறுவன் கைது
previous post