கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் ஊராட்சியில் நடந்து வரும் சாலைகள் அமைக்கும் பணிகளை ஊராட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ஊராட்சியில் ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், ஐயஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 15வது நிதி குழுமத்தின் கீழ் ரூ.10.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஊராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு எம்ஜிநகர் சிஎஸ்ஐ சர்ச் சாலை பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இதுபோல் கிளாம்பாக்கம் 2வது வார்டில் உள்ள பெருமாள் கோயில் தெரு பிரதான சாலையில் பல லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சாலை அமைக்கும் பணிகளை திமுக ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்திக் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒன்றிய கவுன்சிலர் பி.எஸ்.மலைராஜா, வார்டு உறுப்பினர்கள் ராபர்ட், விஜயரங்கன், மலர்தனசேகரன், பார்த்திபன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜான்தினகரன், கிளை செயலாளர் சி.ஜே.கார்த்திக், முன்னாள் வார்டு உறுப்பினர் தீனா உட்பட பலர் உடனிருந்தனர்….