திசையன்விளை, பிப். 22: இட்டமொழி ஏ.வி.ஜோசப் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்து முடிந்த ஊரக திறனாய்வு தேர்வில் ஸ்பினோலா மற்றும் ஜெயம்சக்தி ஆகிய இரு மாணவர்களும் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். அவர்களுக்கு பள்ளியின் பழைய மாணவர் சங்கம் சார்பில் ரொக்க பரிசு வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ரூபன் செல்வக்குமார், பழைய மாணவர் சங்க நிர்வாகிகள் ஆர்தர் சாம்ராஜ், நம்பித்துரை, ஆசிரியர் ஞானத்துரை பங்கேற்றனர்.