பாவூர்சத்திரம், பிப்.22: கீழப்பாவூர் ஒன்றிய கூட்டம் தலைவர் காவேரி சீனித்துரை தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் முத்துக்குமார், பிடிஓக்கள் குழந்தைமணி, கந்தசாமி, முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் நாகராஜன், வளன்ராஜா, தர்மராஜ், முருகேசன், ஜான்சிஜெயமலர், மகேஸ்வரி, ஹேமா, ராஜேஸ்வரி, கனகஜோதி, ராதாகுமாரி, மரிய செல்வ மேரி, சுரேஷ் லிகோரி, சரவணன், புவனா, அருமை உட்பட பலர் பங்கேற்றனர். ஒன்றியத்தில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.