ஊட்டி, ஜூன் 2: உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குன்னூர் நுகர்வோர் சங்கம் சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குன்னூரில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமை வகித்து துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் கூறுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் மே 31ம் நாள் உலக புகையிலை எதிர்ப்பு நாளாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.