சாயல்குடி : கடலாடியில் உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.ஆகஸ்ட் 1 முதல் 7வரை உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடலாடியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை சார்பாக தாய்ப்பாலின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மயிலம்மாள் தலைமை வகித்தார். தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியம், தாய்பாலால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, புத்தி கூர்மை வளர்ச்சி ஏற்படும்.பெண்களுக்கு மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும், அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் சத்துமாவு, இணையுணவை சாப்பிட வேண்டும், குழந்தை பிறந்து, மற்றொரு குழந்தை பெற இரண்டு ஆண்டுகள் இடைவேளை வேண்டும், கர்ப்பணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போடவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.பிறகு தாய்ப்பாலின் அவசியம் குறித்து கடலாடி யூனியன் அலுவலக வளாகம், பஸ் ஸ்டாண்ட் போன்ற பொது இடங்களில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் வெள்ளைப்பாண்டியன், மைதிலி கலந்து கொண்டனர்….