சேலம், மார்ச் 22:சேலம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் ரோடு கான்டிராக்டராக உள்ளார். இவரிடம் நாமக்கல் மாவட்டம், பெரியப்பட்டியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (42) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சாலை அமைக்க தார் வாங்குவதற்காக, ராமசாமியிடம் ₹4.75 லட்சத்தை பெற்றுக் கொண்டு தனது வீட்டிற்கு நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நாழிக்கல்பட்டி மூலக்கடை அருகே, தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அவ்வழியாக வந்த ஜெயபிரகாஷின் டூவீலரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வந்த ₹4.75 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, தெற்கு தாசில்தார் மற்றும் தேர்தல் உதவி அலுவலருமான செல்வராஜிடம் ஒப்படைத்தனர்.
உரிய ஆவணம் இல்லாத ₹4.75 லட்சம் பறிமுதல்
previous post