சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள முனீஸ்வர்நாத் பண்டாரி ஜெய்ப்பூரிலிருந்து விமானத்தில் சென்னை வந்தார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் பானர்ஜி மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். எனவே, தலைமை நீதிபதி பதவிக்கு மூத்த நீதிபதியாக உள்ள துரைசாமி, சென்னை ஐகோர்ட்டில் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி முனிஸ்வரர்நாத் பண்டாரி சென்னை ஐகோர்ட் மூத்த நீதிபதியாகவும், பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.இதையடுத்து இன்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்றுக்கொள்கிறார். அவருக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் கவர்னர் ரவி, பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.இதற்காக அவர், நேற்று பகல் 12.30 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் ஜெய்ப்பூரிலிருந்து சென்னை விமானநிலையம் வந்தடைந்தார். …