கோவை பிப்.2: கோவை சாயிபாபா காலனி உதவிகமிஷனராக பணியாற்றி வந்தவர் சந்திரசேகரன். இவர் திருநெல்வேலி மாவட்டம் குற்ற ஆவண பதிவேடுகள் பிரிவிற்கு உதவி கமிஷனராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். திருப்பூர் உதவி கமிஷனர் கார்த்திகேயன் கோவை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாக பணியிடம் மாற்றப்பட்டார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த மனோகரன் கோவை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி கமிஷனராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
திருப்பூர் மாநகர குற்ற ஆவண பிரிவு உதவி கமிஷனர் ராஜன் கோவை மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனராக பணியிடம் மாற்றப்பட்டார்.கோவை மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் குணசேகரன் திருப்பூர் மாவட்டத்திற்கு டிஎஸ்பி ஆக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். கோவை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் சரவணன் திருச்சி உதவி கமிஷனராக பணியிடம் மாற்றப்பட்டார்.
கோவை மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி ஜனனி பிரியா கோவை மாவட்ட சிவில் சப்ளை டிஎஸ்பியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். கோவை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி அண்ணாதுரை திருப்பூர் மாவட்டத்திற்கு உதவி கமிஷனராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். கோவை மாவட்ட குற்ற ஆவண பதிவேடு டிஎஸ்பி வெற்றி செல்வன் பேரூர் டிஎஸ்பியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.