கொழும்பு: இலங்கையில் மட்டகளப்பு அருகே உள்ள தாளங்குடா பகுதியை சேர்ந்தவர் பீதாம்பரம் ராஜன் (56). விலங்குகளின் மீது மிகுந்த பாசம் கொண்டவர். இவருடைய வீட்டுக்கு தினமும் சென்ற குரங்குக்கு அவர் உணவு கொடுத்து வந்தார். இந்நிலையில், ராஜன் திடீரென இறந்தார். வீட்டில் அவருக்கு இறுதிச் சடங்கு நடந்து கொண்டிருந்தது. அப்போது, குரங்கு அங்கு வந்தது. உயிரற்று கிடந்த ராஜனை எழுப்ப, அது பல்வேறு முயற்சிகளை செய்தது. அவருடைய சட்டையை இழுத்தது. முகத்தை வருடியது. அசைவற்று அவர் கிடந்ததால், அவர் இறந்து விட்டதை உணர்ந்த அந்த குரங்கு அவர் மீது படுத்து கண்ணீர் சிந்தியது. அவரை முத்தமிட்டது. ராஜனின் குடும்பத்தினரும், இறுதிச் சடங்கிற்கு வந்திருந்த அப்பகுதி மக்களும் இதை பார்த்து சிலிர்த்தனர். அவர்களுக்கு துக்கம் இன்னும் அதிகமாகி விட்டது. ராஜன் மீது குரங்கு காட்டிய பாசத்தை கண்டு, கதறி அழ தொடங்கி விட்டனர். குரங்கின் இந்த பாச பிணைப்பு வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. …
உணவு அளித்தவர் சாவு கண்ணீர் சிந்திய குரங்கு
previous post