பல்லாவரம்: சென்னை அசோக்நகர், 10-வது தெருவை சேர்ந்தவர் சவுந்தர்யா (23). பட்டதாரியான இவர், பம்மல்-நாகல்கேணி பகுதியில் ஒரு தனியார் தொழிற்சாலை ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவர் நாள்தோறும் குரோம்பேட்டைக்கு பேருந்தில் வந்து, அங்கிருந்து தான் வேலை பார்க்கும் நாகல்கேணி தொழிற்சாலைக்கு நடந்து வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று மாலை வேலை முடிந்து சவுந்தர்யா குரோம்பேட்டைக்கு தனியே நடந்து வந்தார். இதை நோட்டமிட்ட 2 மர்ம நபர்கள், ஓரிடத்தில் சவுந்தர்யாவை வழிமறித்தனர். பின்னர், அவரது செல்போனை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பி சென்றனர். இதுகுறித்து சங்கர் நகர் போலீசில் சவுந்தர்யா புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளின் மூலம் 2 மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்….