Saturday, June 1, 2024
Home » இதய நோய்க்கு முறையாக மாத்திரை எடுத்துகொண்டால் மேலும் 10 வருடம் உயிர் வாழலாம்: டாக்டர் முஞ்சால் பேச்சு

இதய நோய்க்கு முறையாக மாத்திரை எடுத்துகொண்டால் மேலும் 10 வருடம் உயிர் வாழலாம்: டாக்டர் முஞ்சால் பேச்சு

by kannappan

மாமல்லபுரம்: இதய நோய்க்கு முறையாக மாத்திரை எடுத்துகொண்டால் மேலும் 10 வருடம் உயிர் வாழலாம் என டாக்டர் முஞ்சால் கூறினார். மாமல்லபுரத்தில் தமிழக சிறப்பு பொது மருத்துவர்கள் சங்கம் மற்றும் செங்கல்பட்டு மருத்துவ நிபுணர்களின் சங்கத்தின் 2 நாள் மாநாடு நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இம்மாநாட்டிற்கு, செங்கல்பட்டு மருத்துவ நிபுணர்களின் சங்க தலைவர் பாலாஜி, செயலாளர் அப்பன்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த  மாநாட்டில் பொது மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில், மருத்துவ துறையில் புதிய ஆராய்ச்சிகள் குறித்தும், இருதயம், இரத்த அழுத்தம், எலும்பு, கொழுப்பு, சிறுநீரகம், நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் தொற்றுநோய் ஆகிய முக்கிய உடல் உறுப்புகளின்செயலிழப்பை நவீன மருத்துவத்தின் மூலம் எப்படி கட்டுப்படுத்தி, குணப்படுத்துவது என்பது குறித்தும், மருத்துவ ஆராய்ச்சி துறையில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்தும் கலந்துரையாடல் நடைப்பெற்றது. மேலும், அமெரிக்கா மருத்துவ ஆராய்ச்சி துறையில், தற்போது புற்றுநோய்க்கு முதல் கட்டமாக குணப்படுத்துவதற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு 10 பேருக்கு கொடுத்து சோதனை செய்தபோது, அனைவரும் 100 சதவீதம் குணமடைந்ததற்கு இம்மாநாட்டில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து,  மருத்துவம் படிக்கும் 235 மாணவர்களின் சிறந்த ஆய்வு கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, வசீகரன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியும்,  அரசு மருத்துவமனைகளிலும், மருத்துவ கல்லூரிகளிலும் பல வருடங்கள்  பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த மருத்துவர்கள், பல்வேறு மருத்துவர்கள் உருவாக  காரணமான பேராசிரியர்கள் பலரும் நினைவு பரிசுகள் வழங்கி  கவுரவிக்கப்பட்டனர்.  இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முஞ்சால் பேசும்போது, ‘நீரிழிவு நோயை முழுமையாக கட்டுப்படுத்தி, உயிரிழப்பை தடுக்க மாத்திரைகள் உள்ளது. இதய நோய் உள்ளவர்கள் பயப்பட வேண்டாம். இதை, கட்டுப்படுத்த ரூ.70ல் மாத்திரை உள்ளது. அந்த, மாத்திரையை எடுத்துக் கொண்டால் ஒருவரை மேலும் 10 வருடம் உயிர் வாழ வைக்க முடியும்’ என்றார்.  நேற்று மாலை முடிவடைந்த இம்மாநாட்டில், சேதுராமன், பழனியப்பன், சந்திரசேகர், ரமேஷ் உள்ளிட்ட  500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்….

You may also like

Leave a Comment

seventeen + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi