வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறை மீனவகிரமத்தில் ஐயப்பன் ஆலய நூதன அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கடந்த 21ம் தேதி விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் துவங்கி முதல் கால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மூன்றுகால பூஜை நடைபெற்றது. நேற்று நான்காம் கால பூஜைகள் துவங்கி நடைபெற்றது.
பின்பு யாத்ராதானம் கடம்புறப்பாடு நடைபெற்று கோயிலை சுற்றி வலம் வந்து விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு மூலவர் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஆறுகாட்டுதுறை கிராம பஞ்சாயத்தார்கள், ஐயப்ப பக்தர்கள் செய்து இருந்தனர்.