புதுச்சேரி: ஆரோவில் பகுதியில் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதி அளித்துள்ளார். புதுச்சேரி அரசு சார்பில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழா கொண்டாப்பட்டது. இதனையொட்டி ஆளுநர் மாளிகை அருகே அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர், முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பள்ளி மாணவிகள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை; புதுச்சேரியில் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். பசுமை புதுச்சேரியை உருவாக்க அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் அரசு செய்து வருவதாக தெரிவித்த அவர்; ஆரோவில் பகுதியில் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும் என்றார். ஆரோவில் பகுதியில் எக்காரணத்தைக் கொண்டும் இயற்கை வளம் அளிக்கப்படாது. திட்டத்திற்காக அப்புறப்படுத்தப்படும் மரங்கள் மாற்று இடத்தில் நடப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் பாரதியாருக்கு வானுயர சிலை அமைக்க முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளேன் இவ்வாறு கூறினார்….