விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த சங்கரநாராயணன் என்பவரின் தொலைபேசி எண்ணிற்கு தேசிய வங்கி எண்ணுடன் பான்கார்டு இணைக்க வேண்டும் என குறுந்தகவல் வந்துள்ளது. இதையடுத்து சங்கரநாராயணன், அக்குறுந்தகவலில் வந்த லிங்க்கை அழுத்தியவுடன் அவரது வங்கி கணக்கில் இருந்து ₹2.30 லட்சம் எடுக்கப்பட்டது.விருதுநகர் சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில் மோசடி செய்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த புரமோத் குமார், பினோத்குமார் ஆகியோர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. போலீசார் திகார் சென்று இருவரையும் அழைத்து வந்து விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்….