கந்தர்வகோட்டை: ஆதனக்கோட்டை பகுதிகளில் எள் அறுபடை பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை பகுதிகளில் சம்பாநெல் அறுவடைக்குப் பிறகு எள் செடிகள் அறுவடை தீவிரமாக உள்ளது. மேலும் பெரும்பாலான விவசாயிகள் சம்பா நெல் அறுவடைக்குப் பிறகு கடலையும், எள்ளும் பயிர் செய்து உள்ளனர். அவைகள் தற்சமயம் நன்கு விளைந்து மகசூல் காணும் பருவத்தில் உள்ளன. இப்பகுதி விவசாயிகள் வயலில் அரிந்த கடலைகளை அரவை மில்லுக்கு கொண்டு வந்து அரைத்து கடலை பருப்பாக விற்பனை செய்யும் நிலையில் தற்போது எள் அறுவடை நடைபெற்று வருகிறது….