தண்டையார்பேட்டை: பூக்கடை சரகத்திற்கு உட்பட்ட கொத்தவால்சாவடி வடக்கு கடற்கரை முத்தியால்பேட்டை யானைகவுனி ஆகிய பகுதிகளில் அதிக அளவு வணிக ரீதியாக அதிகளவில் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி கொத்தவால்சாவடியில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை, வடக்கு மண்டல இணை ஆணையர் பிரதீப் தொடங்கி வைத்தார். இதில் ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்….