மதுரை, ஏப்.11: அரசு பள்ளி முதுகலை ஆசிரியையிடம் கைப்பையை திருடியவர் கைது செய்யப்பட்டார். மதுரை ஆண்டாள்புரத்தைச் சேர்ந்தவர் நித்திலாமா தேவி(48). இவர், சுந்தர்ராஜபுரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் முதுகலை கணித பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றுகிறார். கடந்த, 5ம் தேதி தான் பணிபுரியும் பள்ளியிலிருந்து காமராஜர் சாலையில் உள்ள நிர்மலா மேல்நிலைப் பள்ளிக்கு விடைத்தாள் திருத்தும் பணிக்கு, தனது டூவீலரில் சென்றார். அப்போது, அவரின் கைப்பையை வாகனத்தின் வலதுபக்க கைப்பிடியில் தொங்கவிட்டபடி சென்றுள்ளார். கீழவாசல் சந்திப்பை கடந்து சென்றபோது, நித்திலாமா தேவியின் கைப்பையை வாலிபர் ஒருவர் திருடிச் சென்றார். இது குறித்து விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிந்து செல்லூர், மீனாட்சிபுரம், வ.உ.சி,இரண்டாவது தெருவைச் சேர்ந்த ராஜகோபால்(32) என்பவரை கைது செய்தனர். கைப்பையில் இருந்த ரூ.6 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
ஆசிரியையின் கைப்பையை திருடிய வாலிபர் கைது
previous post