நாகர்கோவில், ஏப்.16 : நாகர்கோவில் மணிக்கட்டி பொட்டல் தாமரை குட்டிவிளையை சேர்ந்தவர் எட்வின் (52). ஆசிரியர். இவருக்கும், மணிக்கட்டி பொட்டல் பிள்ளையார்புரத்தை சேர்ந்த தனபால் என்பவருக்கும் இடையே சொத்து வாங்குவதில் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று எட்வின், தனது மனைவி கவிதாவுடன், பைக்கில் இருளப்பபுரம் மீன்சந்தை அருகே வந்து கொண்டிருந்தபோது, தனபால், என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த பாபு என்ற ஆட்டோ பாபு மற்றும் கண்டால் தெரியும் ஒரு நபர் ஆகிய 3 பேர் சேர்ந்து தடுத்து நிறுத்தி, எட்வினை தாக்கினர். இதை தடுக்க முயன்ற எட்வின், மனைவியை மானபங்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து எட்வின் அளித்த புகாரின் பேரில் தனபால் உள்பட 3 பேர் மீது கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.