அவிநாசி, ஏப்.11: அவிநாசி அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழாவில் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் தீச்சட்டி (பூவோடு) எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அவிநாசியில் கங்கவார்தெரு அழகு நாச்சியம்மன் கோயிலில் பொங்கல் மற்றும் பூச்சாட்டுவிழா நந்தா தீபம், காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவில், தினமும் காலை ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருதல் நடைபெற்றது. அம்மனுக்கு காலை, மாலையில் அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வந்து, அம்மனுக்கு பொங்கலை வைத்து, கூட்டு வழிபாடு நடத்தினர். நேற்று அதிகாலை படைக்கலம் எடுத்தல், பெண்கள் பூவோடு எடுத்து ஊர்வலமாக வந்தனர். நேற்று சிம்ம வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா வருதலும் நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா
previous post