Monday, June 17, 2024
Home » அலட்சிய பேச்சு கேரள மகளிர் ஆணைய தலைவி ராஜினாமா

அலட்சிய பேச்சு கேரள மகளிர் ஆணைய தலைவி ராஜினாமா

by kannappan

திருவனந்தபுரம்: கேரள மகளிர் ஆணையத்தின் தலைவர் ஜோசபின். மலையாள டிவி சேனல் ஒன்றில் வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்ட  பெண்களுக்கு ஆலோசனை வழங்கவும், புகார்கள் அளிக்கவும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், ஜோசபின் பங்கேற்றார்.  ஏராளமான பெண்கள் போன் மூலம் தொடர்பு  கொண்டு அவரிடம் புகார் தெரிவித்தனர். அப்போது,  எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் தன்னை  கணவரும், மாமியாரும் தாக்குவதாக  கூறினார்.  அதற்கு, ‘இது பற்றி போலீசில் புகார் செய்தீர்களா?’ என்று ஜோசபின் கேட்டார். அந்த பெண் புகார் செய்யவில்லை என்றார். ‘அப்படி என்றால், சிரமத்தை அனுபவித்துதான் ஆக வேண்டும்,’ என்று ஜோசபின்  கூறினார். இவ்வாறு அவர் பொறுப்பின்றி பதிலளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ேஜாசபினுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஜோசபினும் பங்கேற்றார்.  அவருடைய செயலால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டு இருப்பதால், பதவியை ராஜினாமா செய்யும்படி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்….

You may also like

Leave a Comment

3 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi