சென்னை: அரசு விளம்பரங்களை முறைப்படுத்தும் மூவர் குழுவுக்கு கருத்துக்களை அனுப்பலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: உச்சநீதிமன்ற அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின்படி, அரசு விளம்பரங்களை முறைப்படுத்தி செயல்படுத்த மூவர் குழு கூட்டம் தலைமைச்செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில், உச்சநீதிமன்ற அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின்படி, அரசு விளம்பரங்களை முறைப்படுத்தி செயல்படுத்த அமைக்கப்பட்ட மூவர் குழு தலைவர் நந்தகிஷோர், உறுப்பினர் செயலாளர் ஜெயசீலன், சிவா மெய்யப்பன், சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், அரசு விளம்பரங்களை முறைப்படுத்துவது மற்றும் அரசின் விளம்பர கொள்கையினை முறைப்படுத்தி செயல்படுத்துவதற்கான கருத்துக்களை tnadvtcommittee@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பலாம். …
அரசு விளம்பரங்களை முறைப்படுத்தும் மூவர் குழுவிடம் கருத்துக்களை தெரிவிக்கலாம்
previous post