Monday, April 29, 2024
Home » அரசு பேருந்தில் மது கடத்தல் கடலூரில் சகோதரிகள் கைது

அரசு பேருந்தில் மது கடத்தல் கடலூரில் சகோதரிகள் கைது

by Karthik Yash

கடலூர், ஜூன் 3: புதுவையில் இருந்து கடலூர் வழியாக அரசு பேருந்தில் மது பாட்டில்கள் கடத்திய சகோதரிகளை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக மது கடத்தல் நடைபெறுவதாக வந்த தகவலை தொடர்ந்து கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பேருந்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். பேருந்தில் ஒரு பையில் மது பாட்டில்கள் மற்றும் சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், புதுச்சேரியில் இருந்து மது கடத்தலில் ஈடுபட்டவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த அமுதா(50) மற்றும் அவரது சகோதரி பூமாதேவி (45) என்பது தெரியவந்தது. இருவரும் புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு கடலூர் வழியாக திருவண்ணாமலைக்கு கடத்திச் செல்ல முயன்றது விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மது கடத்தலில் ஈடுபட்ட சகோதரிகள் அமுதா மற்றும் பூமாதேவி ஆகியோர் மீது கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.17,000 மதிப்பிலான 108 மதுபாட்டில்கள் மற்றும் 30 பாக்கெட் புதுவை மாநில சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

You may also like

Leave a Comment

2 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi