சிவகாசி, மார்ச் 31: சிவகாசி அருகே பாரைப்பட்டி திருப்பதி நகரை சேர்ந்தவர் காளிராஜன் (57). இவர் அரசு பஸ் டிரைவர். இவர் நேற்றுமுன்தினம் தேனியில் இருந்து சிவகாசிக்கு அரசு பஸ்சை ஓட்டி வந்தார். சிவகாசிக்கு பஸ் வந்த போது பஸ்சில் இருந்து இறங்கிய ஷேசாத்திரி, ஹரிஹரன் மற்றும் சிலர் காளிராஜனிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
அரசு பஸ் டிரைவர் மீது சராமாரி தாக்குதல்
previous post