Friday, May 17, 2024
Home » அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய போதை நபர் கைது

அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய போதை நபர் கைது

by Karthik Yash

ஓமலூர், ஏப்.14:ஓமலூரில் இருந்து முத்துநாயக்கன்பட்டி நோக்கி அரசு பஸ் பயணிகளுடன் புறப்பட்டது. பஸ்சில் சரவணன் (40) என்பவர் கண்டக்டராக இருந்தார். அந்த பஸ் கோட்டை மாரியம்மன் கோயில் அருகே சென்றது. அப்போது பஸ்சில் மேச்சேரி அருகே கொட்டம்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்த அழகேசன் (58) என்பவர் மது போதையில் இருந்தார். அவர் கண்டக்டரிடம் ஓமலூருக்கு டிக்கெட் கேட்டார். அதற்கு கண்டக்டர் தற்போது ஓமலூரில் இருந்து தான் பஸ் வருகிறது என்றார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அழகேசன், கண்டக்டர் சரவணனை சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த அவர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அழகேசனை கைது செய்தனர்.

You may also like

Leave a Comment

20 + 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi