முத்துப்பேட்டை, ஜன.12: முத்துப்பேட்டை அருகே அரசு பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்று பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் தலைவர் துரை.உத்திராபதி தலைமையில் நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் மனோகரன் முன்னிலை வகித்தார். முன்னதாக ஆசிரியர் செல்வராசு. வரவேற்று பேசினார். கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் வரும் கல்வி ஆண்டில் இந்த அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.